உன் நெஞ்சிலே உண்டான


Befiehl du deine Wege
Bavarian 77;   156

319                                                                    7, 6, 7, 6, D.

1.         உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
            கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி ;
            விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
            உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.

2.         ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல்
            நீ நம்பி, மனதாரபணிந்து பற்றிக்கொள்;
            உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது;
            வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு .

3.         ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர்
            இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர்;
            நீர் எதை நல்லதாக கண்டீரோ, அதை நீர்
            உம் வேளை பலமாக வர விடுகிறீர் .

4.         பல வழிவகையும் உம்மாலே ஏற்படும்;
            நீர் செய்வது இசையும், நீர் சொன்னது வரும்;
            நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம்
            உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம்.

5.         இக்கட்டுகளினாலே கலங்கினோனே, நீ
            திடன்கொள், கர்த்தராலே இக்கட்டான ராத்திரி
            சந்தோஷமாக மாறும், சற்றே பொறுத்திரு;
            நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது .

5.         உன் கவலைகளுக்கு இன்றே விடைகொடு;
            இனி விசாரத்துக்கு இடங்கொடாதிரு;
            நீ ஆளும் தெய்வமல்ல, நீ பூச்சி யென்றறி;
            சருவத்திற்கும் வல்ல கர்த்தர் அதிபதி.

6.         நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில்,
            கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில்
            உன் துக்கத்தை அகற்ற வெளிச்சம் காண்பிப்பார்;
            நீ நன்மைக்காகப் பட்ட சலிப்பை நீக்குவார் .

7.         அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும்
            ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும்
            அடைந்து, இன்பமான மன மகிழ்ச்சியாய்
            அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய் .

8.         கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
            ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்;
            ஆ, எங்களைத் தேற்றிடும்; பரகதிக்குப் போம்,
            வழியிலும் நடத்தும், அப்போ பிழைக்கிறோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு