இளைஞர் நேசா அன்பரே


Just as I am Thine own to be

182

(குறிப்பு: இப்பா முழுவதிலும் நான்காம் அடியை, "நாதா வந்தேன்" என நான்கு அசையாக மட்டும் அமைத்து, Songs of Praise 583 இன் இராகமாகப் பாடலாம்)

1.        இளைஞர் நேசா, அன்பரே,
            அடியேனை உம் சொந்தமாய்
            படைத்திட சமூலமாய்,
            ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.

2.         இளமைக் காலை என்னையே
            படைப்பேன் வாக்குப்படியே,
            பின்வையேன் ஒன்றும் – இப்போதே
            பூரண ஆவலாய் வந்தேன்.

3.         ஒளியில் என்றும் ஜீவிப்பேன்
            நீதிக்காய் என்றும் உழைப்பேன்,
            முழுபலத்தால் சேவிப்பேன்;
            உம்மண்டை ஆதலால் வந்தேன்.

4.         சிறியேன் திடகாத்திரன்;
            சத்தியம் நீதி, உமக்காய்
            ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்;
            ஜீவாதிபதி - நான் வந்தேன்.

5.         பொன், புகழ், சித்தி, இன்பமும்
            மேன்மையாய்த் தோன்றும் - ஆயினும்
            விஸ்வாசமே மேல் நாட்டமாய்
            ஜீவ நாள் முற்றிலும் – வந்தேன்.

6.         உமக்காய் மேன்மையடைய,
            ஜெயித்து, கிரீடம் சூடிட,
            பணிந்தும் பாதம் படைக்க,
            ஆண்டவா, கர்த்தா - நான் வந்தேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு