உங்களைப் படைத்தவர்


Maldstone

279                                                                           7, 7, 7, 7 D

1.         உங்களைப் படைத்தவர்
            சருவ தயாபரர்;
            தம்மில் வாழ்ந்து ஜீவிக்க,
            என்றும் தம்மோடிருக்க
            ஆசைப்பட்டோர் உங்களைப்
            பார்த்து, “என் சிநேகத்தை
            தள்ளிவிட்டு நிற்பதார்?
            திரும்புங்கள்”, என்கிறார்.

2.         உங்களை ரட்சித்தவர்
            தெய்வ சுதனானவர்;
            திரு ரத்தம் சிந்தினார்,
            சிலுவையில் மரித்தார்;
            “நீங்கள் வீணில் சாவதேன்!
            மரித்துங்களை மீட்டேன்,”
            என்று கூறி நிற்கிறார்,
            “திரும்புங்கள்,” என்கிறார்.

3.         உங்களை நேசிப்பவர்
            தூய ஆவியானவர்;
            நயம் பயம் காட்டினார்,
            குணப்பட ஏவினார்;
            “தயை பெற வாரீரோ,
            மீட்பைத் தேடமாட்டீரோ!”
            என்றிரங்கிக் கேட்கிறார்,
            “திரும்புங்கள்,” என்கிறார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு