ஓ எருசலேமியாரே


Wake O wake for night is flying
Wachet auf

397                                                 8, 9, 8, 8, 9, 8, 6, 6, 4, 8, 8

1.                 ஓ, எருசலேமியாரே,
            விழியுங்கள்; மெய் மார்க்கத்தாரே,
                        இப்பாதி ராத்திரியிலே
                        பர்த்தா வாறார்; வேகமாக
            எழுந்திருங்கள்; புத்தியாக
                        இருக்கும் கன்னிகள் எங்கே?
                        தீவர்த்திகளையே
            எடுத்தெதிர்கொண்டே
                                    போம் நேரமாம்,
                        என்றிரவில் அலங்கத்தில்
                        நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.

2.                     சீயோனாகிய மனைவி
            சந்தோஷம் மனதில் பரவி
                        விழித்தெழுந்திருக்கிறாள்;
                        அவள் நேசர் மேன்மையோடும்
            சிநேகத்தோடும் தயவோடும்
                        வெளிப்படுகிறதினால்
                        கிலேசம் நீங்கிற்று;
            ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா!
                        அடியாரும் கம்பீரிக்கும்
                        கதிக்குச் செல்வோமே, கர்த்தா.

3.                     சுரமண்டலங்களாலும்,
            நரர் சுரர்கள் நாவினாலும்,
                        துதிக்கப்பட்டோர் தேவரீர்;
                        மோட்சலோகம் மா சிறப்பு,
            நீர் எங்களை வானோர்களுக்கு
                        ஒப்பானோராக மாற்றுவீர்
                        அவ்வாழ்வைக் கண்டோர் ஆர்?
            காதாலே கேட்டோர் ஆர்?
                                    நாங்கள் மகா
                        சந்தோஷமும் மகிழ்ச்சியும்
                        அடைகிறோம்; அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு