என்றும் கர்த்தாவுடன்


For ever with the Lord
Nearer Home

401                                         D.S.M.

1.                 “என்றும் கர்த்தாவுடன்,
                        நான் கூடி வாழுவேன்,”
            இவ்வாக்கினால் சாகா வரன்;
                        செத்தாலும் ஜீவிப்பேன்;
                        பற்றாசையால் உம்மை
                        விட்டே நான் அலைந்தேன்;
            நாடோறும் வழி நடந்தே
                        விண் வீட்டைக் கிட்டுவேன்

2.                     அதோ சமீபமே,
                        பிதாவின் வீடுதான்!
            என் ஞானக் கண்கள் காணுமே
                        மின்னும் பொன்னகர் வான்;
                        தூயோர் சுதந்தரம்,
                        நான் நேசிக்கும் நாடே;
            என் ஆவி மேலெருசலேம்
                        சேரத் தவிக்குமே.

3.                     “கர்த்தாவுடன் என்றும்!”-
                        பிதாவே, இங்கும் நீர்
            இவ்வாக்கை நிறைவேற்றவும்
                        சித்தம் கொண்டருள்வீர்,
                        என் பக்கம் தங்கிடின்,
                        தப்பாமலே நிற்பேன்;
            கை தூக்கி என்னைத் தாங்கிடின்,
                        போராடி வெல்லுவேன்.

4.         என் ஜீவன் போகும் நாள்
                        கிழியும் இத்திரை;
            சாவை அழிப்பேன் சாவினால்
                        சாகா உயிர் பெற்றே;
                        என் தேவனைக் காண்பேன்,
                        நின்று களிப்புடன்
            சிம்மாசனத்தின் முன் சொல்வேன்:-
                        “என்றும் கர்த்தாவுடன்”.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு