என்னோடிரும் மா நேச கர்த்தரே


Abide with me fast falls the eventide
Eventide

36                                                                                10, 10, 10, 10

            என்னோடிரும், மா நேச கர்த்தரே,
            வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
            மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
            நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.

2.         நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
            இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
            கண் கண்ட யாவும் மாறி வாடிடும்
            மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.

3.         நியாயம் தீர்ப்போராக என்னண்டை
            வராமல், சாந்தம் தயை கிருபை
            நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
            நீர் பாவி நேசரே, என்னோடிரும்.

4.         நீர் கூடநின்று அருள் புரியும்;
            பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
            என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
            இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

5.         நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
            நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
            சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
            நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

6.         நான் சாகும் அந்தகார நேரத்தில்
            உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
            விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
            வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு