ஒன்றே தேவை என்றுரைத்தீர்


Mins is noth sch Herr dies Eixe
Bavarian 43

341                                                     8, 7, 8, 7, 12, 12, 11, 11

1.         ஒன்றே தேவை என்றுரைத்தீர்,
                        ஸ்வாமி, அதை நாடுவேன்;
            என்னை உம்மண்டைக்கழைத்தீர்,
                        மாங்கையை அரோசிப்பேன்;
            நான் உலகை எத்தனை தழுவினாலும்
            பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்
            அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான்
            அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.

2.         இதைச் சிஷ்டிகளிடத்தில்
                        தேடினால், கிடையாதே;
            இயேசு ஸ்வாமியின் வசத்தில்
                        வாழ்வெல்லாம் இருக்குமே;
            என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்கு சாவும்
            இம்மானுவேலே பரிபூரணம் யாவும்,
            அகப்படப்பண்ணுவர், அவரை நீ
            உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.

3.         இந்தப் பங்கையே மரியாள்
                        தனக்குத் தெரிந்தாளே;
            வாஞ்சையாகிய பசியால்
                        கிறிஸ்தின் பாதத்தண்டையே
            இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக
            மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
            சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
            அடைந்ததால், மனத்தில் பூரித்தாளே.

4.         நானும் அந்த வாஞ்சையோடே
                        உம்மையே, என் இயேசுவே,
            அண்டிக்கொண்டேன்; நீர் என்னோடே
                        ஐக்கியமாகும், ஜீவனே,
            பெரும் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
            நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
            தொடருவேன்; உமக்குள் யாவும் உண்டே.
            நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.

5.         இப்போ பூரணக் களிப்பு
                        என் நெஞ்சை நிரப்பிற்று;
            நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
                        என்னைத் திருப்தி யாக்கிற்று.
            உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும்
            நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும்
            சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
            சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.

6.         ஆகையாலே நான் தெரிந்து,
                        பற்றும் பேறெல்லாம் நீரே;
            என்னை நீர் ஆராய்ந்தறிந்து
                        உண்மையாக்கும், இயேசுவே;
            நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
            என் கால்களை மோட்ச வழியிலே காரும்;
            நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டே
            இருக்குவும்; மற்றது குப்பையாமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு