என் மீட்பர் ரத்தம் சிந்தினார்


My hope is built on nothing less Credo
Credo

339                                                                     8, 8, 8, 8, 8, 8

1.         என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
            மா நீதியும் சம்பாதித்தார்;
            என் சொந்த நீதி வெறுத்தேன்,
            இயேசுவின் நாமம் நம்புவேன்;
            நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
            வேறஸ்திபாரம் மணல்தான்.

2.         கார் மேகம் அவர் முகத்தை
            மறைக்கும் காலம், அவரை
            எப்போதும் போல நம்புவேன்,
            மாறாதவர் என்றறிவேன்;
            நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
            வேறஸ்திபாரம் மணல்தான்.

3.         மரண வெள்ளம் பொங்கினும்,
            என் மாம்சம் சோர்ந்து போயினும்,
            உம் வாக்குத்தத்தம் ஆணையும்
            என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
            நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்
            வேறஸ்திபாரம் மணல்தான்.

4.         நியாயத்தீர்ப்புக் காலத்தில்
            எக்காள சத்தம் கேட்கையில்,
            அஞ்சேன் என் மீட்பர் நீதியே
            அநீதன் என்னை மூடுமே;
            நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
            வேறஸ்திபாரம் மணல்தான்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு