உம் சார்பினில் நடத்தும் தந்தையே


Lead us O Father in the paths
Fenitentia

318                                            10, 10, 10, 10

1.         உம் சார்பினில் நடத்தும், தந்தையே;
            உம் துணையின்றித் தவறுவோமே,
            சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்;
            மெய் வழி கிறிஸ்து மூலம் நடத்தும்.

2.         சத்தியத்தில் நடத்தும், தந்தையே;
            உம் துணையின்றி கேடு சூழுமே;
            வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்,
            சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.

3.         சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே;
            உம் துணையின்றி வழி காணோமே;
            கார்மேகம் மூடி இருள் சூழுவோம்,
            உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.

4.         விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே;
            காடுமேடான பாதை என்றுமே
            உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
            தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு