24 September 2018

உம் அவதாரம் பாரினில்


Wells

75                                                                                      L.M.

1.         உம் அவதாரம் பாரினில்
            கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
            கர்த்தா, உம் சாந்த மார்பினில்
            அன்பாகச் சாயவும் பெற்றான்.

2.         சாவுறும் தன்மை தேவரீர்
            தரித்தும், திவ்விய வாசகன்,
            அநாதி ஜோதி ரூபம் நீர்,
            என்றே தெரிந்துகொண்டனன்.

3.         கழுகைப் பொல் வான் பறந்தே
            மா ரகசியம் கண்ணோக்கினான்
            நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
            மெய்யான சாட்சி கூறினான்.

4.         உம் அன்பு அவன் உள்ளத்தில்
            பெருகி பொங்கி வடிந்து,
            அவன் நல் ஆகமங்களில்
            இன்னும் பிரகாசிக்கின்றது.

5.         சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
            பூலோக ஜோதியான நீர்,
            பிதா, நல்லாவியோடுமே
            என்றென்றும் துதி பெறுவீர்.

(284, 359 பாக்களும் பொருத்தமானவை)

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...