24 September 2018

உயிர்த்தெழும் காலைதன்னில்


On the Resurrection morning
Mansfield

396                                         8, 7, 8, 3

1.       உயிர்த்தெழும் காலைதன்னில்
                        ஆவி தேகம் கூடவும்,
            துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
                        நோவும் போம்.

2.         ஆவி தேகம் சிறு போது
                        நீங்க, தேகம் ஓய்வுறும்;
            தூய அமைதியில் தங்கி
                        துயிலும்.

3.         பாதம் உதயத்தை நோக்கி
                        சோர்ந்த தேகம் துயிலும்,
            உயிர்த்தெழும் மாட்சி நாளின்
                        வரைக்கும்.

4.         ஆவியோ தியானம் மூழ்கி
                        ஆவலாய் செய் விண்ணப்பம்
            கீதமாய் உயிர்க்கும் நாளில்
                        பாடிடும்.

5.         சேர்ந்த ஆவி தேகமதை
                        அப்பால் பிரியாதொன்றும்;
            கிறிஸ்து சாயல் தன்னில் கண்டு
                        பூரிக்கும்.

6.         உயிர்த்தெழும் நாளின் மாட்சி
                        யாரால் சொல்லிமுடியும்?
            நித்திய காலம் மா சந்தோஷம்
                        நிலைக்கும்.

7.         ஆ, அப்பாக்கிய மாட்சி நாளில்
                        மாண்டோர் உயிர்த்தெழுவார்
            பெற்றோர் பிள்ளை சுற்றத்தாரும்
                        கூடுவார்.

8.         நின் சிலுவை பற்றும் எம்மை
                        சாவில் நியாயத்தீர்ப்பிலும்
            காத்து, மா அக்கூட்டம் சேரும்,
                        இயேசுவே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...