கர்த்தாவே அடியேனை நீர்


39. Hesperus (Elim)                                                              L.M.

"Lord, Thou hast searched and..."

1.       கர்த்தாவே, அடியேனை நீர்
            ஆராய்ந் தறிந்திருக்கிறீர்;
            என் தேகம் ஆவி சிந்தையும்
            உமக்கு நன்றாய்த் தெரியும்.

2.         நினைக்கு முன் என் எண்ணமும்
            நடக்குமுன் என் வழியும்
            நான் பேசுமுன் என் வார்த்தையும்
            உமக்கே எல்லாம் தெரியும்.

3.         என் முன்னும் பின்னும் நிற்கிறீர்
            நீர் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
            உமக்குத் தப்பி நான் எங்கே
            பறந்துபோவேன் கர்த்தரே?

4.         உமக்கு மறைந்தோடவே
            ஒளிப்பிடம் வேறில்லையே,
            என்றெண்ணும் ஞானம் தாருமேன்
            எக்காலும் என்னைக் காமுமேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே