உலகத்தைப் பலமுள்ள


Grosser Gott von alten Zeiten
Bavarlan 62

43                                                                        8, 7, 8, 7, 7, 7

1.       உலகத்தைப் பலமுள்ள
                        கையால் ஆண்டு, தினமே
            என்னைக் காக்கும் உண்மையுள்ள
                        மா பெரிய கர்த்தரே,
                        என்னைத் தெய்வ துதிக்கும்
                        இந்த நாள் எழுப்பிடும்.

2.         கர்த்தரின் திருநாளான
                        இந்த நாள் மா இன்பமே;
            இதில் ஓய்வும் உண்மையான
                        ஆறுதலும் ஈவீரே;
                        இதில் ஆவியானவர்
                        மோட்ச வழி காட்டுவர்.

3.         என் ரட்சிப்பை நடப்பிக்க
                        இந்த வேளை தக்கதே;
            தெய்வ தயவைச் சிந்திக்க
                        என்னைத் தூண்டி ஏவுமே;
                        என் ஜெபம் புகழ்ச்சியும்
                        வானமட்டும் ஏறவும்.

4.         தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்
                        உம்முடைய வசனம்
            ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்
                        ருசியான அமிர்தம்;
            ராப்பகலும் அதை நான்
            சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான்.

5.         எங்கள் ஜெபத்துக்கன்பாக
                        நீரே ஆமேன் என்கவும்,
            மோட்சத்தில் உம்மை நேராக
                        நாங்கள் பார்க்குமட்டுக்கும்,
                        ஏகமாய் வணங்குவோம்;
            உம்மைப் பாடிப் போற்றுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு