உன் வாசல் திற சீயோனே


O Sion open wide thy gates
Bristol

147                                                                                 C.M.

1.       உன் வாசல் திற, சீயோனே!
                        மெய்ப் பொருளானவர்
            தாமே ஆசாரிய பலியாய்
                        உன்னிடம் வந்தனர்.

2.         கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?
                        பிதாவின் மைந்தனார்
            தம் பீடமீது பாவத்தின்
                        நிவாரணம் ஆனார்.

3.         தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே,
                        தூய தாய் மரியாள்
            ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள் தான்
                        காணிக்கையாய் வைத்தாள்.

4.         தாம் எதிர் பார்த்த கர்த்தரை
                        அன்னாள் சிமியோனும்
            கண்ணுற்ற சாட்சி கூறினார்
                        ஆனந்தமாகவும்.

5.         சௌபாக்யவதி மாதாவோ
                        தன் நெஞ்சில் யாவையும்
            வைத்தெண்ணியே வணங்கினாள்
                        மா மௌனமாகவும்.

6.         பிதா, குமாரன், ஆவிக்கும்
                        நீடுழி காலமே
            எல்லாக் கனம், மகிமையும்
                        மேன்மேலும் ஓங்குமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு