என் ஆத்துமாவே கர்த்தரை


44. Nattingham St. Magnus                                                  C.M.

"O bless the Lord, my soul"

1.       என் ஆத்துமாவே, கர்த்தரை
                        மகிழ்ந்து போற்றிடு;
            அவர் உயர்ந்த நாமத்தை
                        துதித்துக் கொண்டிரு.

2.         மகா விநோதமாய் உன்னை
                        புவியில் சிஷ்டித்தார்;
            பிசாசால் வந்த மோசத்தை
                        விலக்கி ரட்சித்தார்.

3.         உன்னை யுகங்கள் தோன்றுமுன்
                        அறிந்திருக்கிறார்
            தம்மோடிருக்கும் வாழ்வுக்கு
                        குறித்திருக்கிறார்.

4.         இதை உணர்ந்தென் நெஞ்சமே,
                        விஸ்வாசமாக நீ
            பிதா குமாரன் ஆவியை
                        களிப்பாய்த் தோத்திரி.


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு