ஓர் முறை விட்டு மும்முறை


Forsaken once and thrice denied
Derry

153                                                                           8, 8, 8, 6

1.         ஓர் முறை விட்டு மும்முறை
            சீமோன் மறுத்தும் ஆண்டவர்
            என்னிலே அன்புண்டா? என்றே
                        உயிர்த்தபின் கேட்டனர்.

2.         விஸ்வாசமின்றிக் கர்த்தரை
            பன்முறை நாமும் மறுத்தோம்;
            பயத்தினால் பலமுறை
                        நம் நேசரை விட்டோம்.

3.         சீமோனோ சேவல் கூவுங்கால்
            மனம் கசந்து அழுதான்
            பாறை போல் நின்று பாசத்தால்
                        கர்த்தாவைச் சேவித்தான்.

4.         அவன் போல் அச்சங்கொள்ளினும்,
            நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;
            பாவத்தால் வெட்கம் அடைந்தும்
                        கண்ணீர் சொரிந்திலோம்.

5.         நாங்களும் உம்மை விட்டுமே
            பன்முறை மறுதலித்தும்
            நீர் எம்மைப் பார்த்து இயேசுவே
                        நெஞ்சுருகச் செய்யும்.

6.         இடறும் வேளை தாங்கிடும்;
            உம்மைச் சேவிக்கும் கைகளும்
            உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
                        அடியார்க்கருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு