என் ஜீவன் கிறிஸ்துதாமே


Christus der ist mein Leben
Vulpius

393                                                                             7, 6, 7, 6

1.       என் ஜீவன் கிறிஸ்துதாமே,
                        அதாலே எனக்கு
            என் சாவாதாயமாமே;
                        நெஞ்சே, மகிழ்ந்திரு.

2.         நான் இயேசு வசமாக
                        சேர்ந்தென்றும் வாழவே,
            மா சமாதானமாகப்
                        பிரிந்து போவேனே.

3.         பாடற்றுபோம், அந்நாளே
                        என் நோவும் முடியும்;
            என் மீட்பர் புண்ணியத்தாலே
                        மெய் வாழ்வு தொடங்கும்.

4.         நான் பேச்சு மூச்சில்லாமல்
                        குளிர்ந்து போயினும்,
            என் ஆவியைத் தள்ளாமல்
                        உம்மண்டை சேர்த்திடும்.

5.         அப்போது நான் அமர்ந்து,
                        என் நோவை மறப்பேன்;
            உம் சாந்த மார்பில் சாய்ந்து,
                        நன்கிளைப்பாறுவேன்.

6.         நான் உம்மைக் கெட்டியாக
                        பிடித்தும்முடனே
            அநந்த பூரிப்பாக
                        வாழட்டும் இயேசுவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு