09 May 2019

அருளே பொருளே ஆரணமே

கி.கீ:394

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             துதியுனக் கொருகோடி

 

394. (392) குரஞ்சி                                         ஆதி தாளம்

 

1.       அருளே! பொருளே! ஆரணமே[1] அல்லும்பகலுந்துணை நீயே;

            இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,

            மருண்டு மனது பிறழாமல்,[2] வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,

            கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந்[3] துதியுனக் கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,

 

2.         சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்த

            நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய[4] தயைகளுக்கும்,

            என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து

            கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,

 

3.         பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!

            வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா[5] வான் பொருளே!

            பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்

            கற்றில்லாத மிகச் சிறியேன் கழறுந்தியுனக் கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,

 

4.         பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தேயென்றும் வாழ்ந்திருக்க,

            நத்தும்[6] இரவு முழுதனைத்தும்நாதா என்னைக்காத்தருளி,

            முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச்சேர்க்கக்

            கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,

 

 

- ஐ.த. எலியேசர்

 

 



[1] வேதமே

[2] பிசகாமல்

[3] உரக்கக் கூறும்

[4] சொல்லுதற்கரிய

[5] குற்றமற்ற

[6] விரும்பும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...