110. Wareham L.M.
"Herr Jesu Christ, zieh uns dir..."
1. ஆ! யேசுவே,
“நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன்”, என்றீரே.
2. என் நெஞ்சை நீர் இழுக்கையில்
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல் பாவத்தை விடும்,
சிறந்த நன்மைக்குட்படும்.
3. தராதலத்தில் உம்முடன்
உபத்ரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்
சகிப்பவன் சந்தோஷிப்பான்.
4. பிதாவின் வீட்டில் தேவரீர்,
இருப்பிடம் உண்டாக்கினீர்;
அங்கே வசிக்கும் பாக்கியர்
ஆபத்தும் நோவும் அற்றவர்.
No comments:
Post a Comment