20 October 2018

சிலுவை மரத்திலே


157. Ratisbon                          7s, 6l.

"From the Cross uplifted high"

1.         சிலுவை மரத்திலே
            யேசுவை நான் நோக்கவே
            என்னைப் பார்த்தழைக்கிறார்;
            காயங்காட்டிச் சொல்கின்றார்;
            “மீட்பின் செய்கை ஆயிற்றே,
            வாழ வாவேன், பாவியே!”

2.         "பாவப் பலியானதால்
            குத்தப்பட்டேன் ஈட்டியால்;
            ரத்தம் பூசப்பட்டு நீ
            எனக்குன்னை ஒப்புவி;
            மீட்பின் செய்கை ஆயிற்றே
            வாழ வாவேன், பாவியே."

3.         "பான போஜனம் நானே,
            விருந்துண்டு வாழ்வாயே;
            பிதாவண்டை சேரலாம்,
            நேசபிள்ளை ஆகலாம்;
            மீட்பின் செய்கை ஆயிற்றே,
            வாழ வாவேன், பாவியே.”

4.         "சீக்கிரத்தில் வருவேன்,
            உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்,
            நித்யானந்தம் மோட்சத்தில்
            உண்டு, வா என்னண்டையில்,
            மீட்பின் செய்கை ஆயிற்றே,
            வாழ வாவேன், பாவியே."

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...