13 October 2018

தற்பரா தயாபரா நின் தக்ஷணை


Picardy

192                                                                         15, 15, 15.

            தற்பரா தயாபரா, நின் தக்ஷணை
                        கைப்பற்றினோம்;
            பொற்பரா, நினைப் புகழ்ந்து
                        போற்றினோம் பொன் நாமமே;
            அற்புதா, அடைக்கலம் நீ,
                        ஆதரித்தனுப்புவாய்.

2.         நாவினால் நமஸ்கரித்து, நாதா
                        நினைப் பாடினோம்;
            பாவியான பாதகரைப்,
                        பார்த்திபா, கடாக்ஷித்தே
            ஆவியால் நிரப்பி எம்மை
                        ஆசீர்வதித்தருள்வாய்

3.         நின் சரீரத்தால் எம் மாம்சம்
                        நீதியாக்கப்பெற்றதே;
            மன்னவா, எம்மாசும் நீக்கி
                        மாட்சி முகம் காட்டுவை;
            கன்னலன்ன அன்பின் ஆசி,
                        கர்த்தனே விளம்புவாய்.

4.         தந்தை முகம் என்றும் காணும்
                        மைந்தன் இயேசு நாதனே,
            மந்தையாயெமை மதித்த மாசில்
                        மணி மேசியா,
            விந்தை முகம் காட்டினை நீ
                        வீழ்ந்துணைப் பணிவோமே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...