தற்பரா தயாபரா நின் தக்ஷணை


Picardy

192                                                                         15, 15, 15.

            தற்பரா தயாபரா, நின் தக்ஷணை
                        கைப்பற்றினோம்;
            பொற்பரா, நினைப் புகழ்ந்து
                        போற்றினோம் பொன் நாமமே;
            அற்புதா, அடைக்கலம் நீ,
                        ஆதரித்தனுப்புவாய்.

2.         நாவினால் நமஸ்கரித்து, நாதா
                        நினைப் பாடினோம்;
            பாவியான பாதகரைப்,
                        பார்த்திபா, கடாக்ஷித்தே
            ஆவியால் நிரப்பி எம்மை
                        ஆசீர்வதித்தருள்வாய்

3.         நின் சரீரத்தால் எம் மாம்சம்
                        நீதியாக்கப்பெற்றதே;
            மன்னவா, எம்மாசும் நீக்கி
                        மாட்சி முகம் காட்டுவை;
            கன்னலன்ன அன்பின் ஆசி,
                        கர்த்தனே விளம்புவாய்.

4.         தந்தை முகம் என்றும் காணும்
                        மைந்தன் இயேசு நாதனே,
            மந்தையாயெமை மதித்த மாசில்
                        மணி மேசியா,
            விந்தை முகம் காட்டினை நீ
                        வீழ்ந்துணைப் பணிவோமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே