மா சாலேம் சொர்ண நாடு
Jerusalem the olden
Ewing
405 7, 6, 7, 6 D.
1. மா
சாலேம் சொர்ண
நாடு
பால்
தேனாய் ஓடிடும்;
உன்மேல்
தவித்தே ஏங்கி
என் உள்ளம்
வாடிடும்;
ஆ என்ன
என்ன மாட்சி
பூரிப்பும்
ஆங்குண்டே!
யார்தானும்
கூற வல்லோர்
உன் திவ்விய
ஜோதியே?
2. சீயோன்
நகரில் எங்கும்
பூரிப்பின்
கீதமாம்;
நல் ரத்தச் சாட்சி
சேனை
தூதரின்
ஸ்தானமாம்;
கர்த்தராம்
கிறிஸ்து ஆங்கு
மா ஜோதி வீசுவார்;
விண் மாட்சி மேய்ச்சல்
காட்டி
பக்தரைப்
போஷிப்பார்.
3. கவலை தீர்ந்து
காண்போம்
தாவீதின்
ஆசனம்;
விருந்தர்
ஆர்ப்பரிப்பார்
மா வெற்றி
கீர்த்தனம்;
தம் மீட்பரைப்
பின்சென்று
போராடி
வென்றனர்
என்றென்றும்
மாட்சியோடு
வெண்ணங்கி
பூண்டனர்.
![]()
4. ஆ, பாக்கிய
திவ்விய நாடே,
என்றைக்கும்
சேருவேன்!
![]()
ஆ, பாக்கிய
திவ்விய நாடே,
உன் அருள்
பெறுவேன்!
ஆ, சாம்பல்
மண்ணாம் மாந்தர்
கர்த்தாவைப்
பெறுவார்!
ஆ, இன்றும்
என்றும் மாந்தர்
கர்த்தாவின்
அடியார்!
Comments
Post a Comment