15 October 2018

நாதா ஜீவன் சுகம் தந்தீர்


Thou to Whom the sick and dying
Requlem

224                 8, 7, 8, 7, 7, 7

1.         நாதா, ஜீவன் சுகம் தந்தீர்
                        நாடி வந்த மாந்தர்க்கு;
            இன்றும் ஜீவன் சுகம் ஈவீர்
                        நோயால் வாடுவோருக்கு
                        நாதா, உம்மைப் பணிவோம்,
                        பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

2.         ஆவலாய் சிகிச்சை நாடி
                        சாவோர் பிணியாளிகள்,
            வைத்தியர் சகாயர் தேடி
                        வருவாரே ஏழைகள்;
                        நாதா, சுகம் அருள்வீர்,
                        பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர்.

3.         ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும்
                        கையால் உள்ளத்தாலுமே
            பாசம் அநுதாபத்தோடும்
                        பாரம் நீக்கச் செய்யுமே;
                        நாதா ஜெபம் படைப்போம்,
                        பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

4.         பாவம் நோயும் சாவும் நீங்கும்,
                        யாவும் செய் உம் தயவால்;
            பாடுற்றோராம் மாந்தர் யாரும்
                        பக்த கோடி ஆவதால்,
                        நாதர் ஆசனம் முன்னாய்
                        பாதம் வீழ்வார் பக்தியாய்.

(41, 161, 307, 317, 319, 322, 325, 328, 334, 335, 336, 345, 355, 368 பாக்களும் பொருத்தமானவை)

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...