நெஞ்சமெல்லாம்
நீரே
நிறைந்திருப்பீர்
தேவா
எண்ணி மகிழ்வேனே உமதன்பை
என்றும் மறவேனே உமதன்பை
1. நீரோடை வாஞ்சிக்கும்
மான்களைப் போலவே
கர்த்தரின் சமூகத்தை தேடிடுவேன்
காலையும் மாலையும் தேவனின்
பிரசன்னம் என்னை நிரப்பும் மகிமையே
2. எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு
செய்தவரே உம்மை துதித்திடுவேன்
இராச்சாமத்திலும் விழிப்புடன் இருந்தே
நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன்
3. மன்னவரின் நேசம் நான் மலரடி சேர
என்னை வழி நடத்தும் உமது வேதம்
சொன்ன மொழி யாவும் என்னில் நிறைவேறும்
சத்திய வார்த்தைகள் நிச்சயமே
No comments:
Post a Comment