நெஞ்சிலே நிறைந்தவரே துதிக்கிறேன்
நினைவில் நிறைந்தவரே துதிக்கிறேன்
நின்றாலும் நடந்தாலும் உமது
நினைவுதான்
அமர்ந்தாலும்
படுத்தாலும் உமது நினைவுதான்
1. நான் வலது பக்கம் இடது பக்கம் சாயும் போது
இதுதான் வழியென்று
காட்டுகின்றீர்
ஸ்தோத்திரம் என் வழிகாட்டியே
ஸ்தோத்திரம் என் துணையாளரே
2. என் கால்கள் கல்லில் இடறாமல் பாதுகாக்க
உம் தூதர்கள் எனக்காக அனுப்புகின்றீர்
ஸ்தோத்திரம் என் அடைக்கலமே
ஸ்தோத்திரம் என் புகலிடமே
3. நீர் நேசிக்கின்ற
பாதைகளை எனக்கு காட்டி
என் மேல் கண்களை வைத்து நடத்துகின்றீர்
ஸ்தோத்திரம் என் மேய்ப்பரே
ஸ்தோத்திரம் என் மீட்பரே
- Pr. Chandra Sekaran
No comments:
Post a Comment