வழியாய் ஒளியாய் மகிபன் பிறந்தார்
வழியாய் ஒளியாய் மகிபன்
பிறந்தார்
மகிழ் கொண்டாடுவோம்
இருளின் வலிமை ஒழிக்க பிறந்தார்
வாரும் பண் பாடுவோம் - 2
விந்தை இங்கு விந்தை இங்கு
இறைவன் மனுவாய் பிறந்தது
- 2
மகிழ்ந்து பாடுவோம், மகிழ்கொண்டாடுவோம் - 2 - வழியாய்
1. ஏசாயா சொன்ன வாக்கிதுவே
ஈசாயின் வேரில் தோன்றினாரே
இயேசென்னும்
இனிய நாமமிதே
இரட்சிப்பை ஈவாய்
ஈந்திடவே - 2
தாழ்மையாக தாரணியில்
தாவீதின் மைந்தன் பிறந்தாரே - 2 - வழியாய்
2. பாவத்தின் சாபத்தின் ரூபங்களை
பாரிலே முற்றிலும் அகற்றிட
உன்னத தேவனாய் பிறந்தாரே
மகிமை மகிமை மகிமையே - 2
பூமியிலே சமாதானம் எல்லா சனத்திற்கும் சந்தோசமே - 2 - வழியாய்
- Nellai Selvin
https://www.youtube.com/watch?v=hcvhKEuoEbE
Comments
Post a Comment