பணியா யொசிரசே படியோர் பவமே சுமந்து


பணியாயோ சிரசே

15. செஞ்சுருட்டி                                          சாபுதாளம்

அங்கமாலை

1.       பணியா யொசிரசே, படியோர்[1] பவமே சுமந்து
            அணியா முண்முடி பூண்ட சிரசனைப்-பணியாயோ

2.         நெற்றியே நிமிராய், நீதி யுாயநடுத்தீர்ப்பில்
            வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும்-நெற்றி

3.         கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்
            சேணும்[2] மண்ணும் புகழுரை சொற்றதைக்-கேண்

4.         காணீரோ விழிகாள், கண்ணி ரருவிபெருக
            தோணெரு சாலம் துயர்கண்டழு தோனைக்- கேண்

5.         உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து,
            உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை-உதடே

6.         துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்
            நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத்-துதி

7.         கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்
            அண்டம் புகழ நவகீதம் பாடுவர்-கண்டமே

8.         நெஞ்சே நீயணையாய், நேசசீடனும், பாலகரும்
            அஞ்சா துய்ய[3] வணைத்திடு மார்பனை-நெஞ்சே

9.         சேவிப்பீர் செங்கரங்காள், தீயர் நல்லாரெவரெவர்க்கும்
            தாவிப்பணி செய்து யர்த்துங் கரத்தனைச்-சேவி

10.       கால்காள் ஓடுங்களே, கானான் தேசத்திசைகளெங்கும்
            மேலாம் ஞானம் விதைத்தவர் சேவைக்குக்-கால்காள்

11.       பாதங்களே நடமின், படுபாவி கண்ணீராடிக்
            கோதல கைச்சிரம்[4] நைத்த வடிகளில்-பாதங்களே
-ஜி.சே. வேதநாயகம்


[1]. உலகோர்
[2]. வானமும்
[3]. அஞ்சாது உய்ய
[4]. கோது அலகை சிரம் (தீய பிசாசின் தலை)

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு