இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த


உத்தமனே தோத்திரம்

97. சாவேரி                                                   ஆதிதாளம்

பல்லவி

                   இத்தரைமீதினில் வித்தகனா[1] யெழுந்த
                   உத்தமனே தோத்ரம்!

அனுபல்லவி

            நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்
            சித்தங்கொள்வாயென்மீது தத்தஞ்செய்தேனிப்போது. - இத்தரை

சரணங்கள்

1.         கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ?
            காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ?
            விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ?
            வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ? - இத்தரை

2.         அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே;
            ஆசாரியன் தீர்க்கன் ஆயனும் ஆடும் நீயே;
            உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே;
            உத்தம சத்திய முத்தே அதிபதியே! - இத்தரை

3.         தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே,
            தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே,
            வானே யிருந்துபுவி வந்தபெரும் பதமே,
            மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே. - இத்தரை

4.         வானாசனத்திலிருந்து மனுக்குலத்தை நினைத்து
            தானாமனமுவந்து தாரணியில்[2] பிறந்து,
            கோனாய் விளாங்கா நிற்கும் குருவேசுநாதனை நான்
            ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண். - இத்தரை

5.         செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும்
            நெஞ்சாசனத்தில் வைத்து நீடூழிவாழ்தல் வேணும்,
            பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதகம் யாவும்,
            அஞ்சேன் அஞ்சேனே, தேவ தஞ்சம் கண்டதே போதும் - இத்தரை

- சா. பரமானந்தம்



[1] ஞானியாகி
[2] பூலோகத்தில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு