ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு


ஆதிபன் பிறந்தார்

35. (47) கரஹரப்பிரியை                                 ஆதிதாளம்

பல்லவி
                        ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
                        ஆதிபன்[1] பிறந்தார்

அனுபல்லவி
            ஆதிபன் பிறந்தார்,-அமலாதிபன் பிறந்தார். - ஆ!

சரணங்கள்
1.         அன்பான பரனே!-அருள் மேவுங் காரணனே!-நவ
            அச்சய[2] சச்சித-ரட்சகனாகிய
            உச்சிதவரனே! - ஆ!

2.         ஆதம் பவமற,-நீதம்[3] நிறைவேற,-அன்று
            அல்லிராவினில்-தொல்லையிடையினில்
            புல்லணையிற் பிறந்தார். - ஆ!

3.         ஞானியர் தேட,-வானவர் பாட,-மிக
            நன்னய, உன்னத-பன்னரும்[4] மேசையா
            இந்நிலம் பிறந்தார். - ஆ!

4.         கோனவர் நாட, தானவர்[5] கொண்டாட-என்று
            கோத்திரர்[6] தோத்திரஞ்-சாற்றிட வே, யூத
            கோத்திரன் பிறந்தார். - ஆ!

5.         விண்ணுடு தோண,-மன்னவர் பேண,-ஏரோது,
            மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
            விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
- யோ. யாக்கோப்பு


[1]. அதிபன்
[2]. கடவுள்
[3]. நீதி
[4]. சொல்லமுடியாத
[5]. அரசர்
[6]. இனத்தார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு