பரம சேனை கொண்டாடினார்


110. இராகம்: ஆனந்த பைரவி.  தாளம்: ஆதி

பல்லவி

                   பரம சேனை கொண்டாடினார்;
                   பரன் இரக்கத்தைப் பாடினார்

சரணங்கள்

1.         பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து,
            பரன்நர ரூ பணிந்து பணிவானதிற் சிறந்து,       - பரம

2.         இரவின் இருளை மாற்றி இடையர் மனதைத் தேற்றி
            கிருபைப் பரனைப் போற்றிக் கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி         - பரம

3.         சர்ப்பப் பேயை வென்று, சகலர்க் கேய நன்று
            அற்புதமாக இன்று அத்தன் பிறந்தாரென்று      - பரம
- தைரியம் றைற்றர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு