வாழ்த்தியே பாடிடுவோம்


(ராகம்: அருள்ஜோதி உமைக் காண்கிறோம்)

            வாழ்த்தியே பாடிடுவோம்
            பாலன் பிறந்திட்ட
            நாளினை நாமெல்லாம் - வாழ்த்தியே
            ஆ... ஆ... ஆஆ... ஆஆஆ...

1.         கிறிஸ்துப் பிறந்த இந் நன்னாளினை
            கொண்டாடி மகிழ்ந்திட கிருபை செய்தீர்
            பாலனின் பாதம் பணிந்திடவே - 2
            சபையோராய் எல்லாரும் கூடச் செய்தீர்
            இயேசுவே உம் ஆசீர்
            தருவாய் இந் நன்னாளில்          - வாழ்த்தியே

2.         பாவத்தின் இருள்தனை அகற்றிடவே
            தாவீதின் ஊரினில் பிறந்தவரை
            பொன் வெள்ளைப் போளம் சுகந்தத்துடன் -2
            மேய்ப்பரும் படைத்திட்டு பணிந்தனரே
            சபையோரே நாமெல்லாம்
            பணிவுடன் இயேசுவை             - வாழ்த்தியே

3.         உன்னதத்தில் தேவனுக்கு மகிமையுமாய்
            பூமியிலே சமாதானம் கொடுப்பவராய்
            மனுஷர் மேல் பிரியத்தைத் தருபவராய் - 2
            பாரினில் உதித்தீர் நீர் பாலகனாய்
            நம் பாலன் இயேசுவை
            திருச்சபை குடும்பமாய்             - வாழ்த்தியே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு