அதி மங்கல காரணனே


அதி மங்கல காரணனே
 23. (39)                                                       திஸ்ர ஏகதாளம்

பல்லவி
            அதி - மங்கல காரணனே
            துதி - தங்கிய பூரணனே - நரர்
            வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
            வண்மையே தாரணனே!            - அதி

சரணங்கள்
1.         மதி - மங்கின எங்களுக்கும்
            திதி - சிங்கினர்[1] தங்களுக்கும் - உனின்
            மாட்சியும்,[2] திவ்விய காட்சியும் தோன்றிட
            வையாய் துங்கவனே! - அதி

2.         முடி - மன்னர்கள் மேடையையும்,
             மிகு - உன்னத வீடதையும் - எண்ணா
             மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
             வந்தனையோ தரையில்? - அதி

3.         தீய - பேய்த்திரள் ஓடுதற்கும்,
             உம்பர் - வாய்திரள் பாடுதற்கும், - உனைப்
             பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
             பெற்ற நல் கோலம் இதோ?       - அதி
- தேவவரம்




[1]. நிலைகுலைந்தோர்
[2]. மகிமை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு