புண்ணியன் இவர் யாரோ


புண்ணியன் இவர் யாரோ?

45. கேதாரகௌனம்                                        ஆதிதாளம்

பல்லவி
                   புண்ணியன் இவர் யாரோ?-வீழ்ந்து ஜெபிக்கும்
                   புருஷன் சஞ்சலம் யாதோ?

அனுபல்லவி
          தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே,
          மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்.-புண்

சரணங்கள் 
1.         வேளை நீங்காதோ வென்கிறார்;-கொடுமரண
            வேதனை யுற்றேனென்கிறார்;
            ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார்;
            நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார். - புண்

2.         பாத்திரம் நீக்கு மென்கிறார்;-பிதாவே, இந்தப்
            பாடகலாதோ வென்கிறார்;
            நேத்திரம் நீர்பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
            நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் - புண்

3.         என்சித்த மல்ல வென்கிறார்;-அப்பா, நின்சித்தம்
            என்றைக்குமாக வென்கிறார்;
            அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
            துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும். - புண்
- ல.ஈ. ஸ்தேவான்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு