சீரேசு பாலன் ஜெயமனு வேலன்


சீரேசுபாலன் ஜெயமனுவேலன்

25. ஹம்சத்வனி                                                       ஆதிதாளம்

பல்லவி
                        சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
                        சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

அனுபல்லவி
                        பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
                        தாராள மாகத் தாமே மனுவான. - சீரேசு

சரணங்கள்
1.         எண்ணரும் பெருமான்               ஏழைச் சாயலாக
            மண்ணி லேகின                        மாட்சிமை யாலே,
            விண்ணவர்கள் போற்ற,             வெற்றிக்கவி சாற்ற
            வண்ணம்[1] பாடி நாம்                 மகிழ்ந்திட வேண்டாமோ? - சீரேசு

2.         உன்னத பரனுக்                        கொப்பில்லா மகிமை
            இந்நிலத்தினில்                       எழில்சமா தானம்,
            மன்னுயிர்கள் மீது                     மாபிரியம் ஓங்க
            தன்னுயிர் தந்த                        தயவை என்ன சொல்வோம்? - சீரேசு

3.         பாவப் பிணியாலே                     பாதகரைப் போலே
            சாபத்தை நம்மேல்                    நாம் தேடினோமே,
            கோபத்தை ஒழித்தே                குவலயத்தை[2] மீட்க
            தீபமாய் வந்த                           தேவமைந்தனான - சீரேசு

4.         நித்தனே, என் பாவம்                எத்தனையானாலும்
            சித்தம் உருகிச்                       சீர்கூற வேணும்,
            அத்தனே, உன் பாதம்              அண்டினேன் இப்போதும்;
            பத்தியாய் உனைப்                    பகருவேன் எப்போதும் - சீரேசு

-சா. பரமானந்தம்


[1]. இசைப்பாடல்
[2]. பூலோகத்தை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு