என்ன பாக்கியம் எவர்க்குண்டு


என்ன பாக்கியம்

38. (53) சங்கராபரணம்                           ஆதிதாளம்

பல்லவி
                        என்ன பாக்கியம், எவர்க்குண்டு
                        இந்தச் சிலாக்கியம்?

அனுபல்லவி
            விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
            மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; - என்ன

சரணங்கள்
1.         வானகந் தானோ,-அல்லதிது-வையகந் தானோ?
            ஆனகம்[1] சென்று எழுந்த அரும்பொருள்
            கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது; - என்ன

2.         போதும் இவ்வாழ்வு;-பரகதி-போவேன் இப்போது;
            ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
            எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது; - என்ன

3.         சாமியைக் கண்டேன்,-மகானந்தம் சாலவுங்கொண்டேன்,
            காமரு தேங்கனி[2] வாய்கள் துடிப்பதும்,
            கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்;  - என்ன

4.         அன்னமும் நீயே;-கிடைத்தற்கருஞ்-சொன்னமும்[3] நீயே;
            மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
            மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? - என்ன

- காபிரியேல் உபதேசியார்


[1]. தொழுவம்
[2]. இனிய கனி
[3]. தங்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு