ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே


கன்னிமரியாளின் கீதம்

319. உசேனி                                                  ஆதிதாளம்

பல்லவி

            ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்
            ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ!

அனுபல்லவி

                        நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்
                        பார்த்திப னுட[1] பதந் தினம்பணிந்தே.-இதோ! - ஆத்துமா

சரணங்கள்

1.         அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னை
            அனைவரும் பாக்கிய ளென்பாரே,
            முடிவில்லா மகிமை செய்தாரே,-பல
            முடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! - ஆத்துமா

2.         பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்
            பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;
            உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னை
            உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! - ஆத்துமா

3.         முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்த
            முனியாபி ராமுட ஜனமதன்பால்,
            நட்புடன் நினைவொடு நல்லிசரேல்-அவன்
            நலம்பெற ஆதரித் தார்மறவேல்.-இதோ! - ஆத்துமா

- ச.த. ஞானமணி



[1] அரசனுடைய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு