புதுமை தேவகுமாரன்


570
                        புதுமை தேவகுமாரன்
                        பிறந்தார் பெத்லகேம் பாலன்
                        புல்லணை மீது தவழ்ந்தாரே

1.         தூதர் நற்செய்தி சாற்றிடவே
            தேடிச் சென்றனரே - ஓர் கூட்டம்
            காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
            கண்ட காட்சியிதே

2.         ஆயர் குடியில் அன்புருவம்
            ஆண்டவர் பிறந்தார் - மாவிந்தை
            வான சாஸ்திரிகளும் பணிந்தே
            வணங்கும் தாழ்மையிதே

3.         மாந்தர்கள் அன்று காரிருளில்
            மாபெரும் வெளிச்சம் - கண்டார்கள்
            மங்கிடா மனஜோதி இயேசு
            மகிமை சாட்சியிதே

4.         பண்புமிகும் இப்பாலகனே
            பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
            தம்மைப் பின்பற்றியே நடப்போர்
            துதிக்கும் கானமிதே

5.         தேவ பிதாவைத் சேர்வதற்கே
            ஜீவ மார்க்கம் இவர் - கிறிஸ்து
            முன்னணை முதல் கொல்கதாவே
            துன்பப் பாதையிலே

6.         விண் விடிவெள்ளி பாலகனே
            மண்ணுலகினிலே - உதித்தார்
            மீண்டும் மின்னலைப் போல் வருவார்
            மன்னன் வாக்குமிதே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு