பெத்தலையில் பிறந்தவரைப்


பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி

33. சரசாங்கி                                                  திஸ்ர ஏகதாளம்

பல்லவி
                         பெத்தலையில் பிறந்தவரைப்
                        போற்றித்துதி, மனமே-இன்னும்

சரணங்கள்
1.         சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
            தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார். - பெத்

2.         சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
            பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார். - பெத்

3.         முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
            மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே. - பெத்

4.         ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
            ஆக்களுட[1] சத்தத்துக்குள் அழுது பிறந்தார். - பெத்

5.         இந்தடைவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
            எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே. - பெத்
- யோ. பால்மர்


[1]. பசுக்களுடைய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு