சரணம் சரணம் அனந்தா-2


சரணம் சரணம் அனந்தா

50. (85) நீலாம்புரி                      திஸ்ர ஏகதாளம்

பல்லவி
            சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
            தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
 1.         பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
            பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். - சரணம்‌

2.         கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
            காவலன்[1] தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். - சரணம்‌

3.         முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
            மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். - சரணம்‌

4.         கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
            காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். - சரணம்

 5.        துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
            துன்னிய[2] கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். - சரணம்‌

6.         முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
            முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். - சரணம்

- வே. சாஸ்திரியார்


[1]. அரசன்
[2]. கெட்டியான

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு