ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்

அனவரதமும் தோத்திரம்

10. (31) பூரிகல்யாணி                                               ஆதிதாளம்

பல்லவி
            ஆதிபிதாக் குமாரன்-ஆவி திரி யேகர்க்-கு
            அனவரதமும் தோத்திரம்!-திரியேகர்க்கு-கு
            அனவரதமும் தோத்திரம்.

அனுபல்லவி
            நீத[1] முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
            நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
            நிறைந்த சத்திய ஞான மனோகர,
            உறைந்த நித்திய வேத குணாகர,
            நீடு வாரி[2] திரை சூழு மேதினியை
            மூடு பாவ இருள் ஓடவே அருள்செய். - ஆதி

சரணங்கள்
1.         எங்கணும் நிறைந்த நாதர்-பரிசுத்தர்கள்
            என்றென்றைக்கும் பணிபாதர்,
            துங்கமாமறைப்பிர போதர்,-[3]கடைசி நடு
            சோதனை செய் அதி நீதர்,
            பங்கில்லான், தாபம் இல்லான் பகர்அடி[4] முடிவில்லான்,
            பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
            பண்பதாய்சு யம்பு விவேகன்,
            அன்பிரக்கத யாளப்பிரவாகன்
            பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
            பாலனத்தையும்பண் பாய்நடத்தி அருள். - ஆதி

2.         நீதியின் செங்கோல் கைக்கொண்டு-நடத்தினால் நாம்
            நீணிலத்தில்லாமல் அழிந்து,
            தீதறு நரகில் தள்ளுண்டு-மடிவோ மென்று
            தேவ திருவுளம் உணர்ந்து,
            பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
            பரன் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
            பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்,
            இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
            பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
            சூரியன் முன் இருள் போலவே சிதறும். - ஆதி
- காபிரியேல் உபதேசியார்


[1]. நீதி
[2]. கடல்
[3]. ஞானமுள்ளவர்
[4]. தொடக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு