அனவரதமும்
தோத்திரம்
10. (31) பூரிகல்யாணி ஆதிதாளம்
பல்லவி
ஆதிபிதாக் குமாரன்-ஆவி திரி யேகர்க்-கு
அனவரதமும்[1] தோத்திரம்!-திரியேகர்க்கு-கு
அனவரதமும் தோத்திரம்.
அனுபல்லவி
நீத[2] முதற்
பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர,
நீடு வாரி[3] திரை
சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய். - ஆதி
சரணங்கள்
1. எங்கணும் நிறைந்த நாதர்-பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்க[4]மாமறைப்
பிரபோதர்[5],- கடைசி
நடு
சோதனை செய் அதி நீதர்,
பங்கில்லான்,[6] தாபம்
இல்லான் பகர் அடி[7] முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி
என்னும்
பண்பதாய்[8]சு யம்பு
விவேகன்,
அன்பிரக்கத யாளப் பிரவாகன்[9]
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தை[10]யும்பண்
பாய்நடத்தி அருள். - ஆதி
2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு-நடத்தினால்
நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு-மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும். - ஆதி
- காபிரியேல் உபதேசியார்
No comments:
Post a Comment