பாவி மனதுருகே


பாவி, மனதுருகே

26. (43) ஆனந்தபைரவி                               ஆதி தாளம்

பல்லவி
                   பாவி, மனதுருகே!

அனுபல்லவி
                        [1] வீட்டில் ஏர்[2] காட்டு தேவாட்டுக்குப்-பாவி

சரணங்கள்

1.         மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக - நம்
            வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! - பாவி

2.         வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ!
            வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.- பாவி

3.         விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார்,
            கந்தைத் துணி அணிந்தார்; - இப்படி
            மெத்தனவ ராகக் கரி சித்துனைப் புரக்க வந்தார். - பாவி

4.         மேட்டிமையைத் துறந்தார், காட்டினிடை சிறந்தார்.
            மேன்மை அனைத்தும் மறந்தார்; - இந்த
            விந்தைக் கோலத் துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார். - பாவி

5.         நெரிந்த நாணலை முறியார், பொரிந்த திரியை அவியார்
            நிர்ப்பந்தர் தமைப்பிரியார்; - இவர்
            நீதிமான்களை அல்ல, உன்னைப்போல் பாதகரைத் தான் தேடி வந்தார் - பாவி

- வே. சாஸ்திரியார்


[1]. பசு
[2]. அழகு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு