வசனங்கள்


இயேசு பிறப்பின் நற்செய்தி அறிவிப்பு பவனி - வசனங்கள்

1) ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; 
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்,
அவர் நாமம் அதிசயமானவர்,
ஆலோசனைக் கர்த்தா,
வல்லமையுள்ள தேவன்,
நித்திய பிதா,
சமாதானப் பிரபு என்னப்படும்.

2) மத்தேயு1:21
அவள் ஒரு குமாரனைப் பெருவாள்,
அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; 
ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 
                                               
3) மத்தேயு 1:23
அவன்:
இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகிய ஒரு குமாரனைப் பெறுவாள்; 
அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான். 
இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
                         
4) லூக்கா 1:30, 31
தேவதூதன் அவளை நோக்கி:
மரியாளே, பயப்படாதே;
நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். 
இதோ,
நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,
அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.                                                          

5) லூக்கா 2:10, 11
தேவதூதன் அவர்களை நோக்கி:
பயப்படாதிருங்கள்;
இதோ,
எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

6) யோவான் 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி,
கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,
நமக்குள்ளே வாசம் பண்ணினார்; 
அவருடைய மகிமையைக் கண்டோம்; 
அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.   
                                      
7) 2 கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு,
பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

8) எபி.2:14
ஆதலால் பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; ..........



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு