பணிந்து நடந்து கொண்டாரே


பணிந்து நடந்துகொண்டாரே

39. (352) காம்போதி                                                ஆதிதாளம்

பல்லவி 
                  பணிந்து நடந்துகொண்டாரே-பரன் பாலனும்      
                  கனிந்து தாய் தந்தையருக்கு.

அனுபல்லவி 
            அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு
            அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி, - பணி

சரணங்கள் 
1.         தந்தை தாய் தனை மதித்து-அவருடைய‌
            தயவின் சித்தத்துக் கமைந்த‌
            மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
            சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி, - பணி

2.         தந்தைக் குகந்தவேலையில்-அவருடனே
            விந்தை யுடனே பயின்றார்;
            நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்
            எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் - பணி

3.         ஆவி பலமடைந்தார்;-உலக தேவ‌
            அறிவிலும் நிறைவுகொண்டார்;
            தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்
            பூவில் அவர்க்கு நிகர் புனித னில்லாதபடி, - பணி

- சா. சீமோன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு