வானம் பூமியோ பராபரன்


வானம் பூமியா

27.     (46) செஞ்சுருட்டி   ஷ             திஸ்ர ஏகதாளம்

பல்லவி
                         வானம் பூமியோ? பராபரன்
                        மானிடன் ஆனாரோ? என்ன இது?

அனுபல்லவி
             ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம்

சரணங்கள்
 1.         பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
            பொறுமைக் கிருபாசனத்துரை,
            பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! - வானம்

2.         சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
            நித்ய பிதாவினோர்
            கத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? - வானம்

3.         மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
            கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,[1]
            நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! - ஆ! என்ன இது? - வானம்

4.         வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல;
            மாறில்லாத ஈறில்லாத
            வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! - ஆ! என்ன இது? - வானம்

5.         சீயோனின் மாதே, இனி க்ஷெணந்தரியாதே,
            மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
            வந்தவர் மணவாளனல்லவோ?-ஆ! என்ன இது? - வானம்
-வே. சாசுதிரியார்


[1]. ஞானம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு