மன்னுயிர்க்காகத் தன்னுயிர்


மன்னுயிர்க்காக
 19. (39)                                           ஆதிதாளம்

பல்லவி
 1.         மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க‌
            வல்ல பராபரன் வந்தார், வந்தார். -பாரில்

2.         இந்நில‌ம் புர‌க்க‌, உன்ன‌த‌த் திருந்தே
            ஏக‌ப‌ராப‌ர‌ன் வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

3.         வான‌வ‌ர் ப‌ணியுஞ் சேனையின் க‌ருத்த‌ர்,
            ம‌கிமைப் ப‌ராப‌ர‌ன் வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

4.         நித்திய‌ பிதாவின் நேய‌ குமாரன்
            நேமி[1] அனைத்தும் வாழ‌ வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

5.         மெய்யான‌ தேவ‌ன், மெய்யான‌ ம‌னுட‌ன்,
            மேசியா, ஏசையா, வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

6.         தீவினை நாச‌ர், பாவிகள் நேச‌ர்,
            தேவ‌ கிறிஸ்தையா வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

7.         ஜெய‌ அனுகூல‌ர், திவ்விய‌ பால‌ர்
            திரு ம‌னுவேல‌னே வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்
-வே. சாஸ்திரியார்




[1]. பூமி

Comments

  1. How to get the tune for this songs? Please help

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு