ஜகநாதா குரு பரநாதா


ஜகநாதா குருபர நாதா

41. (88, 89) சங்கராபரணம்                              ஆதிதாளம்

பல்லவி
                         ஜகநாதா, குரு பரநாதா, திரு
                        அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!

அனுபல்லவி
                        திகழுறுந்[1] தாதா, புகழுறும் பாதா,
                        தீதறும் வேத போதா! - செக

சரணங்கள்
1.         முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
            மொய்[2] கொண்டு கனியுண்ட பழியாலோ?
            நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
            நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - ஜகநாதா

2.         எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,
            இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
            ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
            உடு[3] வழி காட்டிடப் புரிந்தாயே. - ஜகநாதா

3.         அருந் தவன்[4] கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
            ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
            வரும் தவ மதியால் முன் மற[5] மன்னன் தேடிட, உன்
            மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே. - ஜகநாதா

4.         மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
            மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
            சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
            திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - ஜகநாதா

5.         தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
            தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
            வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
            மேவி அனுபவிக்க நேர்ந்தாயே. - ஜகநாதா

6.         அமரர்[6] முற்றும் அறியார், அடிகள்[7] சற்றும் அறியார்,
            ஆர் உன் திறல்[8] அறிவார், கர்த்தாவே?
            எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
            எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே. - செகநாதா
- வீரமா முனிவர்




[1]. பிரகாசமுள்ள
[2]. பெருமை
[3]. நட்சத்திரம்
[4]. சிமியோன்
[5]. கோபமுள்ள
[6]. தூதர்கள்
[7]. திருப்பாதங்கள்
[8]. வலிமை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு