அப்பா தயாள குணாநந்த


அப்பா தயாள குணநந்தா மோனந்த வேதா

47. (92) நாதநமக்கிரியை                                சாபுதாளம்

கண்ணிகள்
1.         அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா
            இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?

2.         குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்
            செற்றலர்[1] எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ?

3.         கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி
            மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி?

4.         மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்
            பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே.

5.         என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்
            பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ?

6.         இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்
            கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?

7.         நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே?-பல
            கார்பட்ட[2] நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே.
- ஏசுதாசன் அண்ணாவியார்


[1]. பகைவர்
[2]. இருளடைந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு