மேசியா இயேசு நாயனார்


ஏசு நாயனார் நரனாயினார்

31. (66) கமாஸ்                                                       சாபுதாளம்
பல்லவி

            மேசியா ஏசு நாயனார், - எமை
            மீட்கவே நரனாயினார்.

சரணங்கள்
1.         நேசமாய் இந்தக் காசினியோரின்
            நிந்தை அனைத்தும் போக்கவே,
            மாசிலான் ஒரு நீசனாகவே
            வந்தார் எம் கதி நோக்கவே. - மேசியா

2.         தந்தையின் சுதன் மாந்தர் பாதகம்
            சகலமும் அற வேண்டியே,
            விந்தையாய்க் குடில் மீது வந்தனர்
            விண்ணுலகமும் தாண்டியே. - மேசியா

3.         தொண்டர் வாழவும், அண்டரின் குழாம்
            தோத்திரம் மிகப் பாடவும்,
            அண்டு பாவிகள் விண்ணடையவும்
            ஆயர் தேடிக் கொண்டாடவும். - மேசியா

4.         தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
            திருச்சுதன் மனுவேலனார்
            பாவிகள் எங்கள் பாவம் மாறவே
            பார்த்திபன் தேவ பாலனாய். - மேசியா
- ச.    யோசேப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு