காணக்கிடைக்காத தங்கம்


333.

பல்லவி

                   காணக்கிடைக்காத தங்கம் - இவர்
                   மானுவேலாய் வந்தவதரித்தார் - துங்கம்

1.         கண்களினால் காணக்கிடையாத காட்சி
            கண்டோம் நாங்கள் களிகொண்டோ மின்று மாட்சி - காண

2.         மட்டில்லா கிருபையால் மனுக்களை மீட்க
            கொட்டிலில் இவரோர் குழந்தை வடிவானார்  - காண

3.         வானதூதன் சொன்ன ஞான தேசிகரை
            ஊனக்கண்ணால் கண்டு உள்ளம் மகிழ்வோமே   - காண

4.         பாலும் தயிர் வெண்ணெய் பாகும் படைத்து நாம்
            பாதம் பணிந்து பண்பாடி துதி செய்வோம்     - காண

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு