கண்டேனென் கண்குளிர


கர்த்தனைக் கண்டேன்

37. பியாகு (தேசிகம்)                          ஏகதாளம்

பல்லவி
                   கண்டேனென் கண்குளிர-கர்த்தனை யின்று

அனுபல்லவி
            கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக்[1] கையிலேந்திக்-கண்

சரணங்கள்
1.         பெத்தலேம்-சத்திர முன்னணையில்
            உற்றோருக்-குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்

2.         தேவாதி-தேவனை, தேவசேனை
            ஓயாது-தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்

3.         பாவேந்தர்-தேடிவரும் பக்தர் பரனை,
            ஆவேந்தர்-அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் - கண்

4.         முத்தொழிற்-கர்த்தாவாம் முன்னவனை,
            இத்தரை-மீட்க எனை நத்தி வந்த[2] மன்னவனைக் - கண்

5.         மண்ணோர்-இருள்போக்கும் மாமணியை,
            விண்ணோரும்-வேண்டிநிற்கும் விண்மணியைக், கண்மணியைக் - கண்

6.         அண்டி னோர்க்-கன்புருவாம் ஆரணனை,
            கண்டோர்கள்-கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்

7.         அன்னையாம்-கன்னியும் ஐயனுடன்
            முன்னறி-யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்
-மு. ஆபிரகாம் பண்டிதர்


[1]. அரசனை
[2]. விரும்பி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு